×

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ரங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ரங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் தொடங்கியது. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெறும் ரங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்நிகழ்வு டோலோத்ஸவம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தாண்டுக்கான ரங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் நேற்று தொடங்கியது. இந்த விழா வரும் 4ம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது.

ஊஞ்சல் உற்சவத்தையொட்டி ரங்கநாச்சியார் நேற்று மாலை 5.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்தடைந்தார். அங்கு ரங்கநாச்சியார் இரவு 7 மணி முதல் இரவு 8 மணிவரை ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார். பின்னர் இரவு 9 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். ஊஞ்சல் உற்சவ நாட்களில் மாலை 3 மணிமுதல் மாலை 5.30 மணிவரை மூலவர் சேவை கிடையாது.


Tags : Srirangam Ranganadar Temple , Srirangam Ranganatha Temple, Ranganachiyar Unchal Utsavam,
× RELATED ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஜூலை...